2015-03-06 14:51:00

பன்றிக் காய்ச்சலை ஒழிக்க ஆண்டுதோறும் தடுப்பூசி அவசியம்


மார்ச்,06,2015. ஒவ்வோர் ஆண்டும் மழை மற்றும் குளிர் காலங்களில் வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால், ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பாதித்து இதுவரை ஏறக்குறைய 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இது போன்ற உயிரிழப்புக்களைத் தடுக்க, ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், பல இறப்புகளைத் தடுக்க முடியும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

H1N1 என்ற நோய்க் கிருமியால் பரவும் பன்றிக் காய்ச்சலால், இந்தியாவில்  22,240 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என்று நலவாழ்வு அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், பன்றிக் காய்ச்சலால் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மலேசியா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.