2015-03-05 16:11:00

மார்ச் 8, உரோமை புறநகர் பகுதி பங்குத்தளத்தில் திருத்தந்தை


மார்ச்,05,2015. உரோமையின் கிழக்குப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மீட்பரின் அன்னையாம் புனித மரியா பங்குத் தளத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகிற ஞாயிறு தன் மேய்ப்புப்பணி சந்திப்பை நிகழ்த்துவார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

மார்ச் 8, வருகிற ஞாயிறன்று, பிற்பகல் 3.45 மணியளவில் அப்பகுதிக்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு காரித்தாஸ் பிறரன்பு அமைப்பு, நோயுற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென நடத்திவரும் பணிமையத்தை முதலில் பார்வையிடுவார்.

பின்னர், பங்குக் கோவிலை அடையும் திருத்தந்தை, பங்கு இளையோரை முதலில் சந்திக்கிறார் என்றும், அப்பகுதியில் வாழும் ஆறு வறியோர் குடும்பங்களின் உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தபின், கோவிலில் அமர்ந்து, ஒப்புரவு அருள் சாதனம் வழங்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலியில், கர்தினால் Agostino Vallini அவர்களும், இன்னும் சில ஆயர்களும் கலந்துகொள்வர் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.