2015-03-05 15:50:00

இலங்கையின் புதிய அரசுத் தலைவர் வடபகுதிக்கு முதல் பயணம்


மார்ச்,05,2015 இலங்கையை ஒருங்கிணைப்பது என்பது, வெளிப்புறமாகத் தெரியும் முன்னேற்றங்களில் மட்டும் அல்ல, மாறாக, மனதளவில் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளாலேயே உருவாகும் என்று இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கை வடபகுதி முதல்வர் விக்னேஸ்வரன், மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன், வடபகுதி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இலங்கை அரசுத் தலைவர் சிறிசேன அவர்கள் கலந்துகொண்டபோது இவ்வாறு கூறினார்.

வடபகுதியின் முன்னேற்றத்தில், நலவாழ்வு, வேளாண்மை, கல்வி, மீன்பிடித் தொழில் ஆகியவை முதலிடம் பெறவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதென ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் தங்கள் கணவர்களை இழந்த 800க்கும் அதிகமான கைம்பெண்களுக்கு, தகுந்த உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள், பெண்கள் நலத்துறை அமைச்சகத்திடம் கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய அரசுத் தலைவராக, சனவரி மாதம் பொறுப்பேற்ற சிறிசேன அவர்கள், முதன்முறையாக இலங்கையின் வடபகுதிக்கு இச்செவ்வாயன்று பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.