2015-03-05 15:54:00

21 கிறிஸ்தவக் குடும்பங்களுடன் காப்டிக் திருத்தந்தை


மார்ச்,05,2015 அண்மையில் லிபியா நாட்டின் கடற்கரையில் ISIS தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 21 காப்டிக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களை, காப்டிக் திருத்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள் இப்புதனன்று சந்தித்தார்.

கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் வாழ்ந்த Samalot என்ற கிராமத்தில் இக்குடும்பங்களைச் சந்தித்த காப்டிக் திருத்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள், அங்கு நிகழ்த்திய திருவழிபாட்டில், எவ்வித ஐயமுமின்றி, இறந்தோர் அனைவரும் மறைசாட்சிகள் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

இறந்தவர்கள் அனைவரும் மறைசாட்சிகள் என்று கூறப்படும் மரணச் சான்றிதழ்களையும் அவர்கள் குடும்பங்களுக்கு திருத்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள், வழங்கினார் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.

இதற்கிடையே, Mansour Saad Awad என்ற காப்டிக் கிறிஸ்தவர் ஒருவரின் தலை வெட்டப்பட்ட உடல், Mechili என்ற ஊரின் எல்லையில்  கண்டுபிடிக்கப்பட்டது என்று Fides செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.