2015-03-04 15:15:00

போம்பெயி, நேப்பிள்ஸ் நகரங்களில் திருத்தந்தையின் பயணம்


மார்ச்,04,2015 மார்ச் 21ம் தேதி, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் போம்பெயி மற்றும் நேப்பிள்ஸ் நகரங்களுக்குச் செல்லும் நிகழ்வின் விவரங்களை வத்திக்கான் இப்புதனன்று வெளியிட்டது.

மார்ச் 21, காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 8 மணிக்கு போம்பெயி நகரை அடைந்து, அங்குள்ள செபமாலை அன்னையின் திருத்தலத்தில் செபத்தில் ஈடுபடுவார்.

அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, நேப்பிள்ஸ் நகரை 9 மணியளவில் அடைந்து, அங்கு, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் சதுக்கத்தில் நகர அதிகாரிகளையும், மக்களையும் சந்தித்தபின், Plebiscito சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்துவார்.

மதியம் ஒரு மணிக்கு, "Giuseppe Salvia" என்ற சிறையில் உள்ளவர்களைச் சந்தித்து, கைதிகளின் ஒரு சில பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்துவார்.

பிற்பகல் 3 மணிக்கு, புனித Gennaro அவர்களின் திருப்பண்டங்களை வணக்கம் செய்தபின், நேப்பிள்ஸ் பேராலயத்தில், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் நிரந்தர தியாக்கொன்களை சந்தித்து உரையாற்றுவார்.

மாலை 4.15 மணியளவில், Gesù Nuovo பசிலிக்காவில் நோயுற்றோரைச் சந்தித்தபின், 5.00 மணியளவில் Caracciolo சதுக்கத்தில் இளையோரைச் சந்தித்து, உரையாற்றுவார்.

நேப்பிள்ஸ் நகரிலிருந்து 6.15 மணியளவில் புறப்பட்டு, 7.00 மணிக்கு வத்திக்கான் வந்தடைவார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.