2015-03-04 15:21:00

இத்தாலிய மொழியில் முதல் திருப்பலி - பொன்விழாவில் திருத்தந்தை


மார்ச்,04,2015 திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் உரோம் நகர், Via Appia Nuova வில் அமைந்துள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில் 1965ம் ஆண்டு, மார்ச் 7ம் தேதி முதன்முதலாக இத்தாலிய மொழியில் திருப்பலி ஆற்றினார்.

திருஅவை வரலாற்றில் நிகழ்ந்த இந்த முக்கிய மாற்றத்தின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், அதே ஆலயத்தில் மார்ச் 7, வருகிற சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றச் செல்கிறார்.

இக்கோவிலின் பங்குத் தந்தையாக பணியாற்றிய புனித Luigi Orione அவர்கள் இறைவனடி சேர்ந்ததன் 75ம் ஆண்டு நினைவும் இவ்வாண்டு சிறப்பிக்கப்படுகிறது.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த இத்தாலியர்களின் துயர் துடைக்க புனித Luigi Orione அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் வகையில், திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால் அவர்கள் தங்கள் பங்கு கோவிலைத் தேர்ந்தார் என்று கூறிய பங்குத் தந்தை, Francesco Mazzitelli அவர்கள், வறியோரை தன் உள்ளத்தில் எப்போதும் எண்ணி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க வருவது பொருத்தமாக உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.