2015-03-03 15:26:00

இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவதை நிறுத்த செப வழிபாடுகள்


மார்ச்,03,2015. இந்தியாவில் ஆலயங்கள் தாக்கப்படுவது மற்றும் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான காழ்ப்புணர்வைத் தடைசெய்யும் விதமாக, மூன்று நாள்களுக்கு குறைந்தது நூறு இடங்களில் சிறப்பு செப வழிபாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில், இப்புதன் முதல் மூன்று நாள்களுக்கு பல்வேறு ஆலயங்களில் செப வழிபாடுகளை நடத்தவிருப்பதாக, ஜபல்பூர் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை போதகர் F.J.Valsalen அவர்கள் அறிவித்துள்ளார்.

இன்டோர், ஜபல்பூர், உஜ்ஜெய்ன், டமோ, குவாலியர், போபால் ஆகிய ஆறு மாவட்டங்களில் இச்சபையின் போதகர்கள் செப வழிபாடுகளை நடத்துவார்கள் என்றும், இந்துத் தீவிரவாத அமைப்பின் ghar wapsi என்ற கட்டாய மதமாற்ற நிகழ்ச்சி மிகவும் கவலை தருகின்றது என்றும் போதகர் Valsalen அவர்கள் கூறினார்.

ஆதாரம் : DNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.