2015-03-02 16:01:00

லிபியாவில் பணிகளைத் தொடரும் திருஅவைக்கு திருத்தந்தை பாராட்டு


மார்ச்,02,2015 லிபியாவில் நிலவிவரும் அண்மைய பதட்ட நிலைகள் மத்தியிலும், தங்கள் பணிகளைத் தொடர்ந்துவரும் அந்நாட்டு ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலையினருக்கு தன் நன்றியை வெளியிடுவதாக அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த CERNA எனப்படும் வட ஆப்ரிக்கப் பகுதி நாடுகளின் 10 ஆயர்களை, இத்திங்களன்று  திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லிபியாவின் இன்றைய நிலைகள் குறித்து தன் கவலையை வெளியிட்டதோடு, அங்குள்ள தலத்திருஅவை பொறுப்பாளர்களின் தன்னலமற்ற பணி குறித்த மகிழ்வையும் தெரிவித்தார்.

CERNA என்ற ஆயர் பேரவையின் கீழுள்ள Morocco, Algeria, Tunisia மற்றும் Libya வில் உள்ள துறவு சபையினர், தங்கள் நாட்டு சகோதர சகோதரிகளுக்காக தங்களையே அர்ப்பணித்து, பணிகளில் ஈடுபட்டுள்ளது, தொடரவேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஊக்கமளித்தார்.

மதங்களுக்கிடையே கலந்துரையாடல்கள் ஊக்குவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.