2015-03-02 16:04:00

திருத்தந்தை, குர்திஸ்தான் மாநிலப் பிரதமர் சந்திப்பு


மார்ச்02,2015. ஈராக்கின் குர்திஸ்தான் மாநிலப் பிரதமர் Nechirvan Barzani அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து உரையாடினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர், பாப்பிறை பதக்கம் ஒன்றை Nechirvan Barzani அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை.

இத்தாலியிலுள்ள குர்திஸ்தான் மாநிலப் பிரதிநிதி Rezan Kader உட்பட நான்கு ஆண் அதிகாரிகளும் குர்திஸ்தான் பிரதமருடன் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றிருந்தனர். மேலும், ஐ.நா.வின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோ இயக்குனர் இரினோ பொக்கோவா அவர்களும், வத்திக்கானில் இத்திங்களன்று திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினார்.

திருப்பீட நாடுகளுக்கு இடையேயான பொதுச் செயலர் பேராயர் Paul Richard Gallagher, இலத்தீன் அமெரிக்க பாப்பிறை பணிக்குழுவின் உதவித் தலைவர் Guzman Carriquiry ஆகியோரையும் இத்திங்களன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.