2015-03-02 16:23:00

காங்கோவில் அருள்பணியாளர் ஒருவர் சுட்டுக் கொலை


மார்ச்,02,2015. காங்கோ சனநாயக குடியரசின் Mweso நகர் அருள்பணியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத மனிதர்களால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

Mweso பங்குதளத்தின் நிதி நிர்வாகத்தைக் கவனித்துவந்த அருள்பணி Jean-Paul Kakule Kyalembera கொலைச்செய்யப்பட்டுள்ளதற்கு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களே காரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார் அப்பகுதியின் Goma ஆயர் Theophile Kaboy Ruboneka.

மாலையில் கோவிலை மூடச்சென்றபோது, அதனுள் மறைந்திருந்த திருடர்கள், அருள்பணி Kyalembera அவர்களை தலையிலும் வயிற்றிலும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஆதாரம் : FIDES / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.