2015-03-02 14:59:00

கடுகு சிறுத்தாலும் – தன்னையே மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு


ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய்ப்பட்டார். பல சிறந்த மருத்துவர்களிடம் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. என்னசெய்வது என்று கவலையாக இருந்த அவரிடம், “நீங்கள் ஏன் ஒரு வெட்னரி மருத்துவரிடம் போகக் கூடாது?” என்று அவர் மனைவி ஆலோசனை சொன்னார். அதிர்ச்சி அடைந்த கணவர், “உனக்கு அறிவே இல்லையா?” என்றார். அதற்கு அவர் மனைவி, நான் நன்றாகத்தான் இருக்கிறேன், உங்களுக்குத்தான் எல்லாம் கெட்டுப்போச்சு. காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக்னு இட்லியை விழுங்கிட்டு, பந்தயக் குதிரை மாதிரி வேக வேகமாக அலுவலகத்துக்கு ஓடி, அங்க மாடு மாதிரி உழைக்கிறீங்க. அப்புறம் உங்களுக்குக் கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்துறீங்க. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரிக் குறைக்கிறீங்க. அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கறீங்க. அதனாலதான் சொல்றேன், இப்படி இருக்கிற உங்களை கால்நடை மருத்துவர்தான் குணப்படுத்த முடியும்” என்று சொன்னார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவர் முழிக்க, “என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க?” என்று முத்தாய்ப்புடன் முடித்தார் மனைவி. மனிதம் நிறைந்த மனிதாரய் வாழாவிட்டால் இப்படித்தான் கிண்டலுக்கு ஆளாக நேரிடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.