2015-02-26 15:43:00

புல்டோசர் முன்பு முகம் குப்புற வீழ்ந்து துறவியர் போராட்டம்


பிப்.26,2015 எகிப்து நாட்டில் திட்டமிடப்பட்டு வரும் ஒரு சாலையால், 4ம் நூற்றாண்டு முதல் புகழ்பெற்றுள்ள கோவிலும், துறவு மடமும் இடிக்கப்படும் ஆபத்தில் உள்ளன என்று Fides செய்தி கூறுகிறது.

எகிப்தின் Fayoum என்ற நகரை, ஏனைய நகரங்களுடன் இணைக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஒரு சாலையின் கட்டமைப்பு, 4ம் நூற்றாண்டு முதல் காப்பாற்றப்பட்டு வரும் ஒரு பழம்பெரும் கோவிலை பாதிக்கும் என்று காப்டிக் வழிபாட்டு முறை துறவிகள் கூறியுள்ளனர்.

Macarius என்ற புனிதரின் பெயர் தாங்கிய பழைமை வாய்ந்த துறவு மடத்தைச் சேர்ந்த துறவியர், இந்த முயற்சியைத் தடுக்கும் நோக்கத்தில், புல்டோசர்கள் முன்பு முகம் குப்புற வீழ்ந்து போராட்டம் நடத்தினர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

துறவு மடத்தை இடிக்க வந்த பணியாளர்கள், இஸ்லாமிய மதத்தின் கடவுள் பெயரைச் சொன்னபடி முன்னேறி வந்தனர் என்றும் இச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.