2015-02-26 15:12:00

எட்டுமாத கடத்தல் வாழ்வு அனுபவம்–அ.பணி பிரேம் குமார் சே.ச


பிப்.26,2015. JRS என்ற இயேசு சபையினரின் அனைத்துலக புலம்பெயர்ந்தோர் அமைப்பின் ஆப்கான்கிளை, ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அந்நாட்டு அரசோடு இணைந்து கல்விப்பணி ஆற்றி வருகின்றது. இந்த ஆப்கான் கிளைக்குத் தலைவராகப் பணியாற்றியவர் இயேசு சபை மதுரை மாநில அருள்பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார். இவர் கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் கடத்தப்பட்டு இஞ்ஞாயிறன்று விடுதலை அடைந்து இந்தியா வந்துள்ளார். அவரோடு தொலைபேசியில் பேசியவை இதோ உங்களுக்காக... ஆப்கானிஸ்தானில் இயேசு சபையினர் ஆற்றும் பணிகள் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறார் அ.சகோதரர் ஜான் மிசி சே.ச. இவர் டெல்லியில் JRS அமைப்பின் தெற்காசிய கிளையில் ஊடகத்துறை அலுவலகர்.








All the contents on this site are copyrighted ©.