2015-02-25 15:27:00

ஒரு பில்லியன் டாலர்கள் நிதி உதவி கேட்டு WHO விண்ணப்பம்


பிப்.25,2015 உலகெங்கும் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும் 2 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் சார்பாக, உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) ஒரு பில்லியன் டாலர்கள் நிதி உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளது.

உலக நலவாழ்வு நிறுவனத்தின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கிவரும் 50 நாடுகளுக்கு, இச்செவ்வாயன்று, ஜெனீவாவின் தலைமையகத்திலிருந்து இச்சிறப்பு விண்ணப்பத்தை, WHO விடுத்துள்ளது.

பலநாடுகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர்ச்சூழல்கள், இயற்கைப் பேரிடர்கள், மற்றும் எபோலா போன்ற தோற்று நோய்கள் காரணமாக, இந்த நிதி உதவி உடனடியாகத் தேவைப்படுகிறது என்று WHO நிறுவனத்தின் உயர் அதிகாரி, மருத்துவர் Bruce Aylward அவர்கள் கூறினார்.

மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகளில், குழந்தைகளுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.