2015-02-24 15:27:00

கடத்தல் நிகழ்வு ஆபத்தான பகுதிகளில் JRSன் பணிகளுக்கு ஊக்கம்


பிப்.24,2015. புலம்பெயர்ந்தவர் மத்தியில் பணியாற்றுவோர் கடத்தப்படுவது, ஆபத்துக்கள் அதிகம் நிறைந்த பல நாடுகளில், JRS நிறுவனத்தின் பணிகளை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகின்றது என்று JRS நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

இயேசு சபை அருள்பணி பிரேம்குமார் அவர்கள் ஆப்கானிஸ்தானில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டு தற்போது விடுதலையாகி இருப்பது குறித்து CNS செய்தி நிறுவனத்திடம் பேசிய, JRS நிறுவனத்தின் அனைத்துலகத் தொடர்பின் ஒருங்கிணைப்பாளர் James Stapleton இவ்வாறு தெரிவித்தார்.

இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தவர் நிறுவனமான JRSல் பணிபுரிவோர் ஐ.நா. நிறுவனத்திடம் பயிற்சி பெற்றவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தும் இராணுவ அனுபவத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறினார் Stapleton.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் JRS நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய  அருள்பணியாளர் பிரேம்குமார் அவர்கள், இறைவன் தனது வாழ்வைக் காப்பாற்றியுள்ளார் என்றும், தனது கடத்தல் பற்றி வேறு எதுவும் விவாதிக்க விரும்பவில்லை என்றும், தனக்காகச் செபித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.