2015-02-24 15:21:00

அ.பணி பிரேம்குமாரின் விடுதலைக்கு ஆயர்கள் பிரதமருக்கு நன்றி


பிப்.24,2015. அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்கள் கடத்தல்காரர்களிடமிருந்து விடுதலையடைவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் இந்திய ஆயர்கள்.

அருள்பணி பிரேம்குமார் அவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதற்கு, பிரதமர் மோடி அவர்களும், அரசின் பல்வேறு நிறுவனங்களும் எடுத்த முயற்சிகளுக்கு இந்திய ஆயர் பேரவை நன்றி தெரிவிப்பதாக, புதுடெல்லியிலுல்ள CBCI அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இதற்கிடையே, தனது இயேசு சபை தலைவர்கள் அனுமதியளித்தால், தான் மீண்டும் ஆப்கான் பணித்தளத்துக்குச் சென்று பணி செய்யத் தயாராய் இருப்பதாக அருள்பணி பிரேம்குமார் அவர்கள் கூறியதாக, பேராசிரியர் அருள்பணி PR John கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் நான்கு இந்திய இயேசு சபையினர் கல்வி மற்றும் சமூகநலப் பணிகளை ஆற்றி வருகின்றனர். 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.