2015-02-19 15:31:00

சிரியா கிறிஸ்தவர்களுக்கு 28 இலட்சம் டாலர்கள் வழங்க முடிவு


பிப்.19,2015 சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புக்களும், ஐ.நா.அமைப்பும் உதவிகள் செய்ய முன்வந்தாலும், அங்குள்ள கிறிஸ்தவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிவித்துக்கொள்ள தயங்குவதால் உதவிகள் அவர்களைச் சென்று அடைவதில்லை என்று Aid to the Church in Need (ACN) அமைப்பு கூறியுள்ளது.

சிரியாவின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகள் அந்நாட்டைச் சேர்ந்திருந்தாலும், தொடர்ந்து நிலவும் பதட்டமானச் சூழல்கள் பணி அமைப்புக்களின் செயல்பாடுகளைத் தடுக்கின்றன என்று Zenit செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இதற்கிடையே, சிரியாவில் துயர் துடைப்புப் பணிகளுக்கென ACN அமைப்பினர், அண்மையில் 28 இலட்சம் டாலர்கள் தொகையை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இந்த நிதி உதவி கொண்டு, Aleppo, Hassake நகர்களில் வாழும் 4500 குடும்பங்களுக்கு மருத்துவ வசதி, மின் வசதி, மற்றும் குடி நீர் வசதி ஆகியவை செய்து தரப்படும் என்றும் ACN அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.