2015-02-16 16:23:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு அர்ப்பணத்தை மீண்டும் உறுதிசெய்வோம்


பிப்.16,2015. நற்செய்திக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கும் நாம் கொண்டிருக்கும் பொது அர்ப்பணத்தை மீண்டும் உறுதிசெய்வோம் என, இத்திங்கள் காலை வத்திக்கானில் தன்னை சந்தித்த ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபை பிரதிநிதிகளிடம் கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

ஸ்காட்லாந்தின் வளமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்கள், கிறிஸ்தவ சாட்சிய வாழ்வினால் மெருகூட்டப்பட்டவை என உரைத்த திருத்தந்தை, இன்று ஸ்காட்லாந்தில் காணப்படும் கிறிஸ்தவ சபைகளுக்கு இடையேயுள்ள உறவு, கிறிஸ்தவ சபைகளைப் பிரிக்கும் கூறுகள் சிறியனவே என்பதைக் காண்பிப்பதாக உள்ளது என்று கூறினார்.

ஸ்காட்லாந்தில் கத்தோலிக்கத் திருஅவைக்கும், கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையேயுள்ள நல்லுறவு, இன்றையச் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து தீர்வு காண்பதற்கு உதவுவதாக உள்ளது என்ற மகிழ்வையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்றையப் பெரும் சவால்களை எதிர்கொள்ள அனைத்துக் கிறிஸ்தவ சபைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.