2015-02-13 16:31:00

கையால் எழுதிப் பழகினால் குழந்தைகளின் கற்கும் திறன் வளரும்


பிப்.13,2015. கைகளால் எழுதிக் கற்கும் முறை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு துணைபுரிவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கைகளால் எழுதுவதற்குப் பதில் கணினியின் விசைப்பலகை மற்றும் தொடுதிரைகளைப் பயன்படுத்தி குழந்தைகள் அதிகமாக கல்வி கற்கும் தற்போதைய நடைமுறை, அவர்களின் படிக்கும் திறனைப் பாதிப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

குழந்தைகள், பேனா மற்றும் பென்சிலைப் பயன்படுத்தி காகிதத்தில் எழுதும் போக்கு உலக அளவில் படிப்படியாக குறைந்து வருகிறது என்றும், அதற்குப் பதிலாக, குழந்தைகள் கணனிகளின் விசைப்பலகைகளைப் பயன்படுத்தியும் டேப்ளட்டுகளின் தொடுதிரைக் கணனிகளில் விரல்களைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் படைப்புத்திறனும் பாதிக்கப்படும் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.

ஆதாரம்: BBC /வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.