2015-02-12 16:37:00

அருள் பணியாளர்கள், துறவியருக்கு புனித பூமி திருப்பயணம்


பிப்.12,2015 இந்தியாவில் பணியாற்றும் அருள் பணியாளர்கள் மற்றும் இருபால் துறவியருக்கு புனித பூமியில் 20 நாள் பயணம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

மிக அழகான முறையில் திட்டமிடப்பட்டுள்ள இப்பயணத்தால் பெரும்பாலான அருள் பணியாளர்களும் துறவியரும் பயன்பெறுவர் என்று சீரோ மலபார் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்கள் கூறினார்.

புனித பூமி பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்சிஸ்கன் சபையினரும், எருசலேம் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தை நடத்திவரும் சலேசிய சபையினரும் இணைத்து ஏற்பாடு செய்துவரும் இத்திருப்பயணம், ஏப்ரல் 21 முதல், மேமாதம் 10ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவிலிய அறிஞர்கள் வழிநடத்தும் இத்திருப்பயணம், இயேசுவின் சீடர்கள் மேற்கொண்ட பயணத்தின் அடிச்சுவடுகளில் செல்லும் என்று இத்திருப்பயணத்தை ஏற்பாடு செய்பவர்களில் ஒருவரான அருள்பணி டோஜி ஜோஸ் அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.