2015-02-11 16:05:00

நன்னெறி விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள்


பிப்.11,2015 சமுதாய முன்னேற்றம் என்பது, மனிதர்களையும் நன்னெறி விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்ட திட்டங்களாக இருக்கவேண்டும் என்று ஐ.நா. அவைக் கூட்டங்களில், திருப்பீட நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் Bernardito Auza அவர்கள் கூறினார்.

ஐ.நா.வின் பொருளாதார, சமுதாயக் குழுவின் 53வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய பேராயர் Auza அவர்கள், அண்மையக் காலத்தில் உலகம் கண்டுவரும் பொருளாதார வளர்ச்சி அனைத்து தரப்பினரையும் சமமாகச் சென்று சேரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார வளர்ச்சியை மட்டும் மையப்படுத்தி பெருகிவரும் தொழில்கள், தனிமனிதரின் மதிப்பை வளர்க்காமல், அவர்களின் தன்மானத்தைக் குறைத்துவருகின்றன என்பதையும் பேராயர் Auza அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

தனி மனிதர்களையும், குடும்பங்களையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் திட்டங்களே முழுமையான முன்னேற்றப் பாதையில் இவ்வுலகை நடத்திச் செல்லும் என்று பேராயர் Auza அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.