2015-02-11 16:42:00

அன்பை வளர்க்க, குடும்பங்களே தகுந்த பள்ளிக்கூடங்கள்


பிப்.11,2015 அன்பைக் கற்றுக்கொள்ளவும், அனுபவிக்கவும், அன்பில் வளரவும் அடிப்படை உதவியாக இருப்பது குடும்பங்களே என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறினார்.

பாகிஸ்தான் லாகூர் நகரில் அமைந்துள்ள உயிர்ப்புப் பேராலயத்தின் 128வது ஆண்டு நிறைவையொட்டி அங்கு நடைபெற்ற பல்சமயக் கூட்டத்தில் பேசிய லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள், வெறுப்பைக் களைந்து அன்பை வளர்க்க குடும்பங்களே தகுந்த பள்ளிக்கூடங்கள் என்று கூறினார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பாகிஸ்தானில் நிலவும் பல்சமய உரையாடலைக் குறிப்பிட்டுப் பேசிய பேராயர் ஷா அவர்கள், கூடிவந்து செபிக்கும் கிறிஸ்தவக் குடும்பம் வாழும் என்று எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களை ஒருவர் ஒருவரிடமிருந்து தூரப்படுத்தும் வேறுபாடுகளும், வன்முறைகளை எதிர்த்துப் பேசாமல் நாம் காக்கும் மௌனமும் நம்மைத் துன்புறுத்துகின்றன என்று பாகிஸ்தான் ஆங்கிலிக்கன் சபையின் தலைவர் ஆயர் அலெக்சாண்டர் மாலிக் அவர்கள் இக்கூட்டத்தில் உரையாற்றினார். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.