2015-02-09 16:49:00

இஸ்லாம் தீவிரவாதிகளுடன் பேச செஞ்சிலுவைச் சங்கம் தயார்


பிப்.09,2015. சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்நாட்டுப் போர்களுக்குக் காரணமாக இருக்கும் ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தயாராக இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்து, வன்முறைகளை தவிர்க்கும் நோக்கில் அமைதி உடன்பாடுகளை கைக்கொள்ளவேண்டும் என கூறினார் செஞ்சிலுவைச் சங்க இயக்குனர் Yves Daccord

போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கில் ஐ.எஸ். அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுடனும், கீழ்மட்ட உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த செஞ்சிலுவைச் சங்கம் எப்போதும் தயாராக இருப்பதாக அறிவித்தார் Daccord.

ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அலெப்போ மற்றும் ஹோம்ஸ் நகரங்களில்கூட செஞ்சிலுவைப் பணியாளர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் கூறினார். 

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.