2015-02-03 16:10:00

திருஅவையில் பெண்களின் பங்கு குறித்த வத்திக்கான் கூட்டம்


பிப்.03,2015. பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் விவகாரங்கள் குறித்த நான்கு நாள் ஆண்டுக் கூட்டத்தை இப்புதனன்று உரோமையில் ஆரம்பிக்கின்றது திருப்பீட கலாச்சார அவை.

திருஅவையில் பெண்களுக்கு எத்தகைய பதவிகள் பரிந்துரைக்கப்படுகின்றன? இன்றைய திருஅவைக்கு எத்தகைய பெண்கள் தேவை என நாம் நம்மையே கேட்டிருக்கிறோமா? பல்வேறு சமூகங்கள் மற்றும் கலாச்சாரங்களில் பெண்கள் இருப்பின் பண்புகள் என்ன போன்ற தலைப்புகள் இக்கூட்டத்தில் (பிப்.4-7) விவாதிக்கப்படும்.

சமத்துவம் மற்றும் வேறுபாடுகளுக்கிடையே பெண்மைக் கலாச்சாரம் என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், விளம்பரங்களிலும், ஊடகங்களிலும் பெண்கள் பயன்படுத்தப்படுவது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் என, திருப்பீட கலாச்சார அவை பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.