2015-01-31 16:01:00

திருத்தந்தை – உண்மைக்கு நம்பத்தகுந்த சான்று உடனடியாகத் தேவை


சன.31,2015. “உண்மைக்கும், நற்செய்தி விழுமியங்களுக்கும் நம்பத்தகுந்த சான்று உடனடியாகத் தேவைப்படுகின்றது” என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்தாலியின் அரிச்சாவில் பவுலின் அருள்பணியாளர்கள் சபையின் ஆன்மீக இல்லத்தில் அடுத்த மாதம் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ஏறக்குறைய எண்பது திருப்பீடத் தலைமையக அதிகாரிகளும் தவக்கால ஆண்டு தியானத்தைச் செய்யவுள்ளனர்.

"உயிருள்ள கடவுளின் ஊழியர்களும் இறைவாக்கினர்களும்" என்ற தலைப்பில் கார்மேல் துறவு சபை அருள்பணியாளர் Bruno Secondin அவர்கள் இத்தியானச் சிந்தனைகளை வழங்கவுள்ளார்.

அருள்பணியாளர் Bruno Secondin அவர்கள், உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் தற்போது இப்பல்கலைகழகத்தின் ஆன்மீகத் துறையில் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.