2015-01-27 16:35:00

மனம் மாறிய கைதிகளுக்கு பொன்னாடை அணிவித்த அதிகாரிகள்


சன.27,2019. தமிழகத்தில் முன்னாள் கைதிகளில் திருந்தி வாழ்பவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்துள்ளது தமிழக சிறைத்துறை.

இந்தியாவின் 66வது குடியரசு தினவிழாவை வித்தியாசமான முறையில் கொண்டாடிய தமிழக சிறைத் துறையினர், பல்வேறு குற்றங்களில் சிறைத்தண்டனை பெற்று, தண்டனை காலம் முடிந்து விடுதலையாகிய பின்னர், சிறைகளில் கற்ற தொழிலை வைத்து குடும்பத்துடன் மகிழ்வாக வாழும் கைதிகள் 54 பேரைத் தெரிவு செய்து இந்தப் பாராட்டு விழாவை நடத்தினர்.

திருந்தி வாழ்ந்த ஆண்கள் 13 பேரையும், 2 பெண்களையும் சென்னை புழல் சிறைக்கு வரவழைத்து பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சிறைத்துறை இயக்குனர் திரிபாதி உத்தரவின் பேரில் இந்த வித்தியாசமான விழா தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் நடந்தது.

சிறையில் தற்போது தண்டனை அனுபவிக்கும் மற்ற கைதிகள் முன்னிலையில் இந்த விழா நடத்தப்பட்டது.

தாங்கள் அனுபவிக்கும் மகிழ்வை திருந்தி வாழும் நபர்கள், தண்டனை அனுபவிக்கும் கைதிகளிடம் பகிர்ந்து கொண்டனர். தண்டனை அனுபவிக்கும் கைதிகள் நாங்களும் திருந்தி வாழ்வோம் என்று அப்போது உறுதி எடுத்துக் கொண்டனர்.

இந்த விழா ஒரு முன்மாதிரி விழா மட்டும் அல்லாமல், கைதிகள் மத்தியில் ஒரு நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது என்று புழல் சிறை அதிகாரிகள் பெருமிதப்பட்டனர்.

இதுபோல, வேலூர், கடலூர், கோவை, சேலம், மதுரை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களின் மத்திய சிறைகளிலும் இந்த நெகிழ்ச்சியான விழா நடந்தது. இந்த 54 பேரில் 4 பெண்களும் உள்ளடங்குவர்.

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.