2015-01-22 16:39:00

திருத்தந்தை பிரான்சிஸ் - ஒவ்வொரு வாழ்வும் ஒரு கொடை


சன.22,2015. “ஒவ்வொரு வாழ்வும் ஒரு கொடை, மனித வாழ்வைப் பாதுகாப்பதற்குப் பயணம் தொடருவோம்” என்ற வார்த்தைகளை, இவ்வியாழனன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், சனவரி 25, வருகிற ஞாயிறன்று பிரான்சின் பாரிஸ் நகர் பாஸ்த்தில்யா வளாகத்தில் மதியம் 1.30 மணிக்கு மனித வாழ்வை ஆதரித்து, பேரணி ஒன்று தொடங்கவுள்ளது. அதற்கு ஆதரவு தெரிவித்து தனது வாழ்த்துச் செய்தியை ஏற்கனவே அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனித வாழ்வு எப்பொழுதும் புனிதமானது, மதிப்புமிக்கது, மீறமுடியாதது, இந்த வாழ்வு அன்புகூரப்பட்டு பாதுகாக்கப்பட்டு காக்கப்பட வேண்டுமென அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.