சன.21,2015. வியட்நாம் கத்தோலிக்கர் இறைவார்த்தையிலும், மறைக்கல்வி கற்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தங்களின் திறமைகளையும், பணிகளையும் திருஅவையையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்த ஆர்வமாய் உள்ளார்கள் என்று நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கூறினார்.
வியட்நாமுக்கு ஒரு வாரச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி அவர்கள் இவ்வாறு கூறினார்.
வியட்நாமின் Da Nangல் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கென இத்திங்களன்று வியட்நாம் சென்றுள்ள கர்தினால் ஃபிலோனி அவர்கள், வியட்நாமில் ஞாயிறு திருப்பலிக்கு மட்டுமல்லாமல், அன்றாடத் திருப்பலிக்கும் ஏராளமான மக்கள் வருகின்றனர் என்று கூறினார்.
Xuan Loc மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்கிறார் கர்தினால் ஃபிலோனி
தென்கிழக்கு ஆசியாவிலுள்ள கம்யூனிச நாடாகிய வியட்நாமில் இம்மாதம் 26ம் தேதி வரை இப்பயண நிகழ்வுகளை நடத்துகிறார் கர்தினால் ஃபிலோனி.
ஆதாரம் : Fides
All the contents on this site are copyrighted ©. |