2015-01-21 17:01:00

போரில் காயமடைந்தவர் மடுத்திருத்தலத்தில் குணமடைந்துள்ளார்


சன.21,2015. இலங்கையின் மன்னார் மடு அன்னை மரியா திருத்தலத்துக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றபோது திருத்தந்தையின் கரங்களைப் பிடித்துக் குலுக்கியது இறைவனைச் சந்தித்தது போன்று இருந்ததெனவும், திருத்தந்தையின் தொடுதல் பல ஆண்டுகளாக தான் அனுபவித்த வேதனைகளை அகற்றிவிட்டதெனவும் ஓர் இந்து மனிதர் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இனச் சண்டையில், குணரட்னம் சபாரட்னம் என்பவரின் கால்கள் குண்டு வீச்சில் கடுமையாய்த் தாக்கப்பட்டன. 2006ம் ஆண்டில் தனது தம்பியைப் பார்ப்பதற்காகச் சென்றவர், போர்ப் பகுதியில் சிக்கினார். பின்னர் தனது குடும்பத்தோடு தொடர்புகளை இழந்தார்.

தற்போது வன்னியில் கிளேரிசியன் சபையினர் நடத்தும் மறுவாழ்வு மையத்தில் இவர் இருக்கிறார். இப்போது தான் குணமடைந்துள்ளதாக ஓர் ஊடகத்திடம் சாட்சி சொல்லியிருக்கிறார்.

இம்மாதம் 13ம் தேதி காலை முதல் 15ம் தேதி காலை வரை இலங்கையில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.