சன.21,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தால் அந்நாடு தூய ஆவியாரின் புதிய காற்றால் உள்தூண்டுதல் பெற்றுள்ளது என்று பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கூறியுள்ளனர்.
பிலிப்பீன்ஸ் நாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து அந்நாட்டிலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புறப்பட்ட பின்னர் மூன்று நாள் கூட்டத்தைத் தொடங்கியுள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள் திருத்தந்தையின் வார்த்தைகளை நடைமுறைப்படுத்த ஆர்வமாய் இருப்பதாகத் தெரிவித்தனர்.
2015ம் ஆண்டை வறியோர் ஆண்டாக அறிவித்துள்ள பிலிப்பீன்ஸ் ஆயர்கள் அவ்வாண்டு பற்றிய சிந்தனைகளைப் பகிரவும், மேய்ப்புப்பணித் திட்டங்களை உருவாக்கவுமென இக்கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், பிலிப்பீன்சின் செபு நகரில் 2016ம் ஆண்டில் அனைத்துலக திருநற்கருணை மாநாடு நடைபெறவிருப்பதால், அம்மாநாடு பற்றியும், வருகிற அக்டோபரில் வத்திக்கானில் இடம்பெறவுள்ள குடும்பம் குறித்த ஆயர்கள் மாமன்றம் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்து பேசுகின்றனர் பிலிப்பீன்ஸ் ஆயர்கள்.
ஆதாரம் : Fides
All the contents on this site are copyrighted ©. |