2015-01-13 16:38:00

கடுகு சிறுத்தாலும்-வாய்ப்புக்களை ஒத்திபோடுவது பெரிய எதிரி


ஒருமுறை சுவாமி சிவானந்தரிடம் அவருடைய சீடர் சென்று, சுவாமி, வெகுதொலைவில் இருந்து அன்பர் ஒருவர் வந்திருக்கிறார், அவர் சில நாள்கள் இங்கு தங்க விரும்புகிறார், நாளையோ, நாளை மறுநாளோ சுவாமிகள் அவருக்குச் சில புத்தகங்கள் கொடுக்கலாம் என்று சொன்னார். உடனே சுவாமி சிவானந்தர், நாளையோ, நாளை மறுநாளோ அல்ல, இன்றே இப்பொழுதே கொடுத்துவிடலாம், பிறகு அவரின் மனம் மாறிவிடலாம். நமது சேவையை அவருக்குத் தர வாய்ப்பில்லாமல் போகலாம், ஆதலால் இப்பொழுதே புத்தகங்களைக் கொண்டு வாருங்கள், கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்து விடலாம் என்று சொன்னார். அதேபோல் புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் சுவாமி அவர்கள் கையெழுத்திட்டு அந்த அன்பரிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்....

நீங்கள் ஒரு செயலை நாளை செய்ய நினைத்தால் அதை இன்றே செய்துவிடுங்கள். மாலையில் செய்ய நினைத்தால் காலையிலே அதைச் செய்துவிடுங்கள். அப்போது நீங்கள் உண்மையான கர்ம யோகியாக இருப்பீர்கள் என்று.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.