2015-01-10 16:04:00

ஆண்டவரின் நாளில் இயேசுவோடு இருக்க நேரத்தைக் கண்டுபிடிப்போம்


சன.10,2015. “ஞாயிறு ஆண்டவரின் நாள். நாம் ஆண்டவரோடு இருப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்போம்” என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், நம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி 33 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பார் திருத்தந்தை.

பின்னர் பகல் 12 மணிக்கு மூவேளை செப உரையும் வழங்குவார் திருத்தந்தை.

இயேசுவின் திருமுழுக்கு விழாவன்று, குழந்தைகளுக்குத் திருத்தந்தையர் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கி வருகின்றனர்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.