2015-01-09 15:07:00

ஜோர்டனில் புலம்பெயர்ந்துள்ள ஈராக் சிறார்க்கு கல்வி


சன.06,2015. ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து ஜோர்டன் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ள 1400க்கும் மேற்பட்ட சிறார்க்கு ஜோர்டன் அரசு கல்வி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

ஜோர்டன் காரித்தாஸ் நிறுவனத்தின் முயற்சியினால், அந்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈராக் சிறார்க்கு கல்வி வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

ஜோர்டன் பள்ளிகளில் ஈராக் கிறிஸ்தவச் சிறாரைச் சேர்க்கும் நடவடிக்கை தற்போது தொடங்கவுள்ளது. எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை அலுவலகம் மற்றும் எருசலேமிலுள்ள பிற கிறிஸ்தவ சபைகளும் இந்நடவடிக்கையில் ஜோர்டன் அரசுக்கு உதவ உள்ளன.

ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவே பகுதிகளிலிருந்து ஏழாயிரம் கிறிஸ்தவர்கள் ஜோர்டன் நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளனர். இவர்களில் 1400க்கும் மேற்பட்டோர் சிறார். 

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.