சன.07,2015. மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜீரியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை ஏறக்குறைய 200 கிறிஸ்தவ ஆலயங்கள் போகோ ஹாரம் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவால் அழிக்கப்பட்டுள்ளன.
அந்நாட்டின் Borno, Adamawa ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் நகரங்களும் கிராமங்களும் போகோ ஹாரம் குழுவின் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இம்மாநிலங்களில் 185 ஆலயங்களுக்கு நெருப்பு வைக்கப்பட்டுள்ளன மற்றும் 1,90,000த்துக்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் இச்செயல்கள் குறித்து கவலை தெரிவித்த அந்நாட்டின் Maiduguri மறைமாவட்டத்தின் கத்தோலிக்க சமூகத் தொடர்பு மைய இயக்குனர் அருள்பணி Gideon Obasogie அவர்கள், இது நாட்டின் ஒருமைப்பாட்டையும் பொதுநலனையும் பாதிக்கின்றது என்று கூறினார்.
நைஜீரியாவில் போகோ ஹாரம் இஸ்லாமியக் குழுவால் 2012ம் ஆண்டில் 900 கிறிஸ்தவர்கள் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டனர், மற்றும், எண்ணிக்கையற்ற ஆலயங்கள் அழிக்கப்பட்டன.
ஆதாரம் : Agencies
All the contents on this site are copyrighted ©. |