அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க கிறிஸ்தவ சபைகள் விண்ணப்பம்
டிச.29,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும்
சோகத்தைத் தடுத்து நிறுத்ததும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்புவிடுத்துள்ளனர்
அந்நாட்டு கிறிஸ்தவ சபைத் தலைவர்கள். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 30
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கி வன்முறைகளுக்கு பலியாவதாக கவலையை வெளியிட்ட, Salt
Lake Cityல் கூடிய கிறிஸ்தவ சபைத் தலைவர்கள், எவ்வித வேறுபாடுமின்றி, ஆண்கள், பெண்கள்,
சிறுவர் சிறுமிகள், ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஆசியர்கள், தென் அமெரிக்கர்கள் என
அனைவரும் இந்த வன்முறைகளுக்கு பலியாகிவருவதாக தெரிவித்தனர். ஒவ்வோர் உயிரும் கடவுளுக்கு
மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும் முக்கியமானது என்பதை மனதில்கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து
துப்பாக்கி வன்முறைகளை ஒழிக்க முயல்வோம் என அந்நாட்டின் கிறிஸ்தவ சபைகள் ஒன்றிணைந்து
அழைப்புவிடுத்துள்ளன.