2014-12-29 16:34:35

அண்மை விபத்துகள் குறித்து திருத்தந்தையின் செப வேண்டுதல்


டிச.29,2014. தன் நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில், அண்மை துயர் சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு மக்களின் செபங்களுக்கு விண்ணப்பம் விடுத்தார் திருத்தந்தை.
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற AirAsia விமானம் 162 பயணிகளுடன் நடுவானில் காணாமல்போயிருப்பது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதில் பயணம் செய்தவர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்பதாகக்கூறி, அனைவரின் செபத்திற்கும் அழைப்புவிடுத்தார்.
இந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் என சில செய்தி நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கிரேக்கத்திலிருத்து இத்தாலியின் அங்கோனா துறைமுகம் நோக்கிப் பயணம் செய்த இத்தாலியக் கப்பல் திடீரென தீப்பீடித்து எரிந்ததைத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மீட்புப்பணிகள் குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்ததை பிரான்சிஸ்.
இந்த விபத்தில் சிக்கியிருப்பவர்களுக்காகவும், மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மீட்புப்பணியாளர்களுக்கு தன் ஊக்கத்தையும் தெரிவித்தார்.
478 பயணிகளுடன் வந்த இத்தாலியக் கப்பலில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அந்த பயணிகள் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.