கொரிய மக்களுக்கு திருத்தந்தை வழங்கிய ஒலி-ஒளி கிறிஸ்மஸ் செய்தி
டிச.25,2014. "இறைவனின் அழகுக்கு இடம் உருவாக்கும் வண்ணம், நாம் அமைதியாக இருந்து, செவிமடுக்க
முயல்வோம்" என்ற வார்த்தைகளை டிசம்பர் 24ம் தேதி, தன் Twitter செய்தியாகவும், "இயேசுவுடன்
உண்மையான மகிழ்வு உள்ளது" என்ற வார்த்தைகளை டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்பு விழா
Twitter செய்தியாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார். மேலும்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொரிய மக்களுக்கு அனுப்பிய ஒலி ஒளி வடிவச் செய்தி, டிசம்பர்
24ம் தேதி, தென் கொரியாவின் KBS தொலைக்காட்சி நிறுவனத்தால் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருத்தந்தை வழங்கிய செய்தியின் சுருக்கம்: "உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத்
தெரிவிக்கிறேன். ஆகஸ்ட் மாதம் உங்கள் நாட்டில் நான் மேற்கொண்ட பயணத்தை நன்றியோடு எண்ணிப்
பார்க்கிறேன். பெத்லகேமில் பிறந்துள்ள குழந்தை, உங்கள் உள்ளங்களையும், இல்லங்களையும்,
உங்கள் சமுதாயத்தையும் தன் ஒளியால் நிரப்புவாராக. எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். மீண்டும்
ஒருமுறை உங்களுக்கு புனிதமான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்"