டிச.23,2014. கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, தன்னாட்சி
அதிகாரம் பெற்ற ஈராக்கின் குர்திஸ்தானில் கிறிஸ்மஸ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவரின்
பிறப்பு விழாவன்று அனைத்துக் கிறிஸ்தவ சமூகத்துடனும், கிறிஸ்தவ நிறுவனங்களுடனும் ஒருமைப்பாட்டுணர்வை
வெளிப்படுத்தும் விதமாக, டிசம்பர் 25ம் தேதியை விடுமுறையாக அறிவிப்பதாக, ஈராக்கின் குர்திஸ்தான்
அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் அப்பகுதியின் அனைத்துப் பொது நிறுவனங்களும் பள்ளிகளும்
விடுமுறையை அனுசரிக்கும் என, இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள அரசின் செய்தித் தொடர்பாளர்
Sven Dzia அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவித்துள்ளார். அமைதி, பாதுகாப்பு,
நிலையான தன்மை ஆகியவை நிறைந்த ஆண்டாக அமையட்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.