வாரம் ஓர் அலசல்–கிறிஸ்மஸ்க்கு அண்மைத் தயாரிப்புகள்
டிச.22,2014. அன்பு நெஞ்சங்களே, வருகிற வியாழன் கிறிஸ்மஸ் பெருவிழா. வரலாற்று நாயகனாகிய
இயேசு பாலனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு, எல்லா இடங்களிலும் குடில்கள் அமைத்து, புத்தாடைகள்
எடுத்து, வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து தயாரிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால்,
இவை எல்லாவற்றையும்விட நம் நெஞ்சக் குடில்களில் குடியிருக்க விரும்பும் இயேசு பாலனுக்கு
நமது அகம் அதிகமாக அலங்கரிக்கப்பட வேண்டும். கிறிஸ்மஸ்க்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ளவேளை,
இந்த அலங்காரத்தை எப்படிச் செய்யலாம் என, ஆழமான, ஆக்கமான சிந்தனைகளைப் பரிந்துரைக்கிறார்
அருள்பணி ஜோ சேவியர், இயேசு சபை. இவர் தூத்துக்குடி புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி உதவி
தலைமை ஆசிரியர்.