2014-12-22 16:32:22

ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உலகினரின் ஒத்துழைப்பு அவசியம், ஐ.நா.


டிச.22,2014. வறுமையை ஒழிக்கவும், இப்பூமியைப் பாதுகாக்கவும், அனைவருக்கும் மாண்பை உறுதி செய்யவும் உலகினர் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கேட்டுள்ள பான் கி மூன் அவர்கள், ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகளில் வறுமை ஒழிப்பு, இப்பூமியைப் பாதுகாத்தல், அனைவருக்கும் மாண்பு ஆகிய கூறுகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்குகள், மக்கள் மற்றும் இப்புவியை மையப்படுத்தியதாய் அமையும் என்றும், பசி, ஏழ்மை, நோய்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்கு உலகினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.
மேலும், “மனித மாண்புக்குப் பாதை 2030 : வறுமை ஒழிப்பு, அனைத்து உயிரினங்களின் வாழ்வை மாற்றுதல், இப்பூமியைப் பாதுகாத்தல்” எனும் தலைப்பில் ஐ.நா.வின் புதிய வளர்ச்சித் திட்டங்கள் பற்றி இம்மாதம் 4ம் தேதி ஐ.நா. பொது அவையில் ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.