13 நாடுகளின் புதியத் தூதர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
டிச.18,2014. நாடுகளின் தூதர்களாகிய உங்களை வரவேற்கும்போது, உங்கள் நாட்டுத் தலைவர்கள்,
மக்கள் அனைவரையும் திருப்பீடம் அன்புடன் வரவேற்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கூறினார். மலேசியா, பங்களாதேஷ், கத்தார், ருவாண்டா ஆகிய நாடுகள் உட்பட, 13 நாடுகளின்
புதியத் தூதர்களைத் திருப்பீடத்தில் இவ்வியாழன் காலை சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், பன்னாட்டுத் தூதர்கள் ஆற்றும் பணிகளைப் பாராட்டினார். அமெரிக்க ஐக்கிய நாடு,
கியூபா ஆகிய நாடுகள் உறவுகளைப் புதுப்பிப்பதற்கு, அந்நாடுகளின் தூதர்களே பெரும் முயற்சிகள்
மேற்கொண்டனர் என்பதை, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், "எவரும்
இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்று ஆண்டவர் தெளிவாகக் கூறியுள்ளார்: கடவுளுக்கும்,
செல்வத்துக்கும் இடையே நீங்கள் தெரிவு செய்யவேண்டும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழன் வெளியானது.