டிச.15,2014. மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஒரு தன்னார்வ தொண்டு
நிறுவனம் சேகரித்த புள்ளிவிவரங்களின்படி 100 கிராமங்களில் மட்டும் குறைந்தது 150 முதியோர்
கொலைச்செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உசிலம்பட்டியில் இருக்கும் யுரைஸ் என்கிற
தொண்டு நிறுவனம் மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 கிராமங்களில்
மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, இந்த குறிப்பிட்ட 100 கிராமங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட
முதியோர் கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது தமிழ்நாட்டில் நடக்கும் முதியோர்
கொலைகள் குறித்து முறையான விரிவான, பக்கச்சார்பற்ற ஆய்வுகள் எவையும் அரசாங்கத்துறைகளாலோ
அரசு சார்பு அமைப்புக்களாலோ இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், இந்தப் பின்னணியில் இதுகுறித்து
கிடைக்கும் தகவல்கள் அனைத்துமே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேகரித்த தனிப்பட்டத் தகவல்கள்
மட்டுமேயாகும்.