2014-12-13 16:23:43

திருத்தந்தை, இத்தாலிய பிரதமர் சந்திப்பு


டிச.13,2014. இத்தாலிய பிரதமர் மத்தேயோ ரென்சி அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி, ஆகிய இருவரையும் சந்தித்தார் இத்தாலிய பிரதமர் ரென்சி.
இத்தாலியின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலில் காணப்படும் இன்னல்கள், குறிப்பாக, இளையோரின் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்டுள்ள எதிர்மறைத் தாக்கங்கள், வருங்காலப் புதிய தலைமுறைகளுக்கு கல்வியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் போன்றவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது.
பன்னாட்டு விவகாரங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றங்களின்போது மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் வன்முறைகள் குறித்த கவலையும் தெரிவிக்கப்பட்டதாக அவ்வலுவலகம் மேலும் அறிவித்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.