2014-12-13 16:25:46

இலட்சக்கணக்கான வயதானவர்கள் ஒவ்வொரு மாதமும் உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்


டிச.13,2014. உலகில் இலட்சக்கணக்கான வயதானவர்கள் ஒவ்வொரு மாதமும் உரிமை மீறல்களை எதிர்கொள்ளும்வேளை, பல நாடுகளில் 60வயதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் அதிகரித்து வருவது முக்கியமான நலவாழ்வு பிரச்சனையை முன்வைக்கின்றது என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
60வயதும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கை 2025ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 120 கோடியாக உயரும் என்றுரைக்கும் இந்நிறுவனம், வயதான நோயாளிகள் உடலளவில் துன்புறுவதோடு அவர்களின் மாண்பும் மறுக்கப்படுகின்றது என்றும் கூறியுள்ளது.
வயதான சமுதாயம் தாங்கள் எதிர்கொள்ளும் உரிமை மீறல்களை வெளியே அவ்வளவாகச் சொல்வதில்லை எனினும், கடந்த மாதத்தில் வளரும் நாடுகளில் 4 முதல் 6 விழுக்காடு முதியோர், உரிமை மீறல்களை எதிர்கொண்டுள்ளனர் என்று ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
1995ம் ஆண்டில் 54 கோடியே 20 இலட்சமாக இருந்த முதியோரின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் ஏறக்குறைய 120 கோடியாக உயரும் என்றும் இந்நிறுவனம் கணித்துள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.