திருத்தந்தை : விரோதம் எனும் இருளை விரட்டியடிக்கும் ஒளியே மன்னிப்பு
டிச.08,2014. “இறைவார்த்தைக்கு எவ்வாறு மன உறுதியுடன் கீழ்ப்படிவது என்பதை அன்னை மரியிடமிருந்து
கற்றுக்கொள்வோம்” என இத்திங்கள், அமல உற்பவ அன்னை திருவிழாவையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இத்தாலியின் Gubbio நகரில் அமைக்கப்பட்டுள்ள
கிறிஸ்துமஸ் குடில் மற்றும் மரத்தில் வண்ண விளக்குகளை வத்திக்கானிலிருந்தே கணனி மூலம்
ஏற்றிவைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயங்களை ஒளியால் நிறைக்கும் விழா கிறிஸ்துபிறப்பு
விழா என்பதால் ஒளியின்றி கிறிஸ்துமஸை எண்ணிப்பார்க்க முடியாது என்றார். விரோதம் எனும்
இருளை விரட்டியடிக்கும் மன்னிப்பு எனும் ஒளியை அனைத்து இதயங்களும் கொண்டிருக்கவேண்டும்
என்றார் திருத்தந்தை. மன்னிப்பின் முக்கியத்துவத்தை இந்நாளில் எடுத்துரைத்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்கும்படியும் அழைப்பு விடுத்தார்.