2014-12-06 16:25:26

பெல்ஜிய அரசி பபியோலா அவர்களின் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்


டிச.06,2014. பெல்ஜிய நாட்டின் 5வது அரசி பபியோலா அவர்கள் மரணமடைந்ததையொட்டி தனது இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பெல்ஜிய நாட்டு அரசர் பிலிப் அவர்களுக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், பெல்ஜிய நாட்டு அரச குடும்பத்தினருக்கும், அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு, அரசி பபியோலா அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்
பெல்ஜிய நாட்டின் முன்னாள் அரசி பபியோலா அவர்கள் இவ்வெள்ளியன்று பிரசல்ஸ் அரண்மனையில் காலமானார். இஸ்பெயின் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் வயது 86.
பக்தியுள்ள கத்தோலிக்கரான அரசி பபியோலா, 1960ம் ஆண்டில் அரசர் Baudouin அவர்களைத் திருமணம் செய்தார். 1993ம் ஆண்டில் அரசர் Baudouin அவர்கள் இஸ்பெயினில் திடீரென மரணமடைந்தார். அதன்பின்னர் அரசி பபியோலா பொதுவில் வருவதை நிறுத்திவிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.