நேர்காணல் – போபால் விஷவாயுக் கசிவின் முப்பதாம் ஆண்டு
டிச.04,2014. 1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் இந்தியாவின்
போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் methyl isocyanate (MIC) விஷவாயு மற்றும் பிற
வேதியப் பொருள்கள் கசிந்ததால் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதன் பாதிப்பு இன்றுவரை தொடர்கின்றது. இந்தக் கோர நிகழ்வு இடம்பெற்றதன் முப்பதாம் ஆண்டை
முன்னிட்டு திரு.ஆசைத்தம்பி அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். இவர், தி இந்து
தமிழ் நாளிதழின் நடுப்பக்கப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார். கிரேயா என்ற பதிப்பகத்தில்
தற்கால தமிழ் அகராதிப் பிரிவிலும் பணியாற்றியிருக்கின்றார் திரு.ஆசைத்தம ்பி.