2014-12-03 16:11:33

ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் - Ivan Pereira


டிச.03,2014. ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அம்மறைமாவட்டத்தில் பணியாற்றிவரும் அருள் பணியாளர் Ivan Pereira அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று நியமித்தார்.
இம்மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் Peter Celestine Elampassery அவர்கள் பணி ஒய்வு பெற விழைந்து அனுப்பியுள்ள விண்ணப்பத்தையும் திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.
1938ம் ஆண்டு கேரளாவில் பிறந்த Peter அவர்கள், 1966ம் ஆண்டு, கப்பூச்சின் துறவு சபையில் அருள் பணியாளராகத் திருநிலை பெற்று, 1998ம் ஆண்டு ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் ஆயராக பொறுப்பேற்றார்.
மும்பைக்கருகில் வசாய் (Vasai) மறைமாவட்டத்தில், 1964ம் ஆண்டு பிறந்த அருள்பணி Ivan Pereira அவர்கள், 1993ம் ஆண்டு அருள் பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஜம்மு ஸ்ரீநகர் மறைமாவட்டத்தின் கல்விப்பணி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிவந்த அருள்பணி Ivan Pereira அவர்கள், ஆங்கிலத்திலும், கல்வியியலிலும் பட்டங்கள் பெற்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.