வட மற்றும் தென் கொரியாவுக்கு இடையே பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம்
டிச.02,2014. வட மற்றும் தென் கொரிய எல்லையில் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரம் ஒன்றை அமைத்துள்ளது
கொரிய கிறிஸ்துவ அவை. செயோல் நீதித்துறையிடம் பல மாதங்கள் தொடர்ந்து விண்ணப்பித்து
வந்ததன் பயனாகக் கிடைத்த அனுமதியுடன், தென் கொரிய Aegibong உச்சியில் மிகப்பெரிய கிறிஸ்மஸ்
மரம் ஒன்றை அமைத்துள்ளது கொரிய கிறிஸ்துவ அவை. இச்செவ்வாய் காலை தென் கொரிய பாதுகாப்பு
அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்தக் கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகள்
சுடர்விடத் தொடங்கும் நாளில் பங்குகொள்ளும் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்ப்டும்
எனக் கூறப்பட்டுள்ளது. வட கொரிய எல்லையிலுள்ள Aegibong குன்று 165 மீட்டர் உயரமுடையது.