2014-11-28 15:48:03

திருத்தந்தை : விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்க்கு நன்றி


நவ.28,2014. இந்தப் பயணத்தில் உங்களின் உடனிருப்புக்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களை வரவேற்கிறேன். இந்த, சமய மற்றும் மனிதாபிமான நடவடிக்கையில், உங்களின் பணி ஓர் ஆதரவாக, ஓர் உதவியாக, அதோடு உலகுக்கும் ஒரு சேவையாக உள்ளது. இக்காலத்தில், அண்டை நாடுகளில் போரினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்துள்ள பல மக்களுக்கு உதவி வரும் துருக்கி நாடு ஒரு சாட்சியாகவும் உள்ளது. இவ்வேளையில் பத்திரிகையாளர்களின் பணிகள் முக்கியமானவை. உங்கள் பணிக்கு நன்றி கூறுகிறேன். துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தில் மீண்டும் பத்திரிகையாளர் கூட்டத்தில் சந்திப்போம். நன்றிகள் பல. நல்ல பயணமாக இது அமையட்டும் என்று விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.